கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிலையில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சூழலில், தற்போது காங்கிரஸ் 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

சாம்ராஜ் நகர் மாவட்டம் மற்றும் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குடகு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. சித்ரதுர்கா  மாவட்டத்தில் உள்ள சல்லககெரே தொகுதியில் 4-வது இடத்திற்கு பாஜக தள்ளப்பட்டது.