இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தான் கோடை விடுமுறை விடப்படும்.

ஆனால் தற்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.