சென்னை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் இருக்கும் வீட்டில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்வதற்காக சென்ற போது பெண் இன்ஜினியர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்தார்.
இதனையடுத்து திடீரென ஜெயபால் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதால் ஜெயபால் பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.