தமிழ் சினிமா உலகில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படத்தை அடுத்து விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் தனுஷின் மாறன் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்பொழுது பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

இந்த நிலையில் இது பற்றி சமூக வலைதளத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது தெரிவித்ததாவது, தெலுங்கில் இதற்கு முன்பாக விஜய் தேவரகொண்டா உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும் ஆனால் திடீரென அந்த திரைப்படமே ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் மாருதி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். மேலும் படத்தின் பணிகள் தற்போது ஆரம்பமாகி இருப்பதாகவும் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.