வினோத் சொன்னது போலவே தற்போது நடந்து விட்டது.

தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் 210 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்கள். இதுபோல அஜித்தின் திரைப்படமும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த படமாக துணிவு வந்துள்ளது. வாரிசு மற்றும் துணிவு விஷயத்தில் வினோத் சொன்னது தான் நடந்திருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ரிலீசுக்கு முன்பாக 2 படமுமே வெற்றி பெற வேண்டும் என தெரிவித்திருந்தார் இயக்குனர் வினோத். தற்போது அவர் வாரிசும் துணிவும் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்திருக்கின்றார். வினோத்துக்கு நல்ல மனசு. அதனால தான் அவர் ஆசைப்பட்டது மட்டுமே நடந்திருக்கின்றது என பேசப்பட்டு வருகின்றது.