விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று ரிலீசானது. இதனால் இரு தரப்பு ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்துடன் நள்ளிரவு காட்சி அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. மேலும் சில இடங்களில் சிறுசிறு மோதல்களும் ஏற்பட்டது. இதில் குறிப்பாக சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டரில் மோதல் ஏற்பட்டது. மேலும் லாரியிலிருந்து இளைஞர் ஒருவர் கீழே தவறி விழுந்து பலியானார்.

இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதிருந்த நிலையில் தடையையும் மீறி தமிழகத்தில் படம் வெளியான சில மணி நேரத்திலேயே இரண்டு திரைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதனால் பட குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.