செல்வராகவனின் இணையதள பதிவு வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றதையடுத்து இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் பாகாசசூரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இவர் தற்போது புதிய திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இவரின் இணையதள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அவர் தனது இணையதள பக்கத்தில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கிக் கிடந்து வாழ்க்கையில் ஜாலியா இருக்க வேண்டும் என சுற்றித்திரிந்து காலம் முழுவதையும் வீணடித்துவிட்டு கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள் என பதிவிட்டு இருக்கின்றார். இவர் தொடர்ந்து இதுபோல சோகமாக பதிவிட்டு வருவதால் ரசிகர்கள் கவலையை விடுங்கள் மகிழ்ச்சியான காலங்கள் திரும்ப வரும் என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.