அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் ஒன்பது நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சமீப நாட்களாக துப்பாக்கிசூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீன நாட்டின் புது வருட கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 72 வயதுடைய முதியவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.

இதில் 11 நபர்கள் பலியாகினர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.