திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை கட்டுவது தொடர்பான தகராறில் அதிமுக நிர்வாகி 85 வயதுடைய முத்துலட்சுமி என்ற மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனந்த் பாபுவை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஆனந்த் பாபு திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடரும் வைத்துக் கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.