கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை சாலையோரம் அமர்ந்து மது கொண்டிருந்த மர்ம நபர்கள்  வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகே உள்ள சவுக்கு காட்டில் வைத்து ஆடைகளை கிழித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் மண்ணை போட்டு திணறடித்தனர்.

அதுமட்டுமின்றி மூதாட்டி அணிந்திருந்த நகைகளையும் வந்த கும்பல் திருடி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சுந்தரவேல் என்பவரை சுட்டு முடித்தனர். காலில் குண்டுகாயத்துடன் சுந்தரவேல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுந்தரவேல் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்து அவர்களும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.