பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்த நிலையில் தான் இந்தியாவிலேயே வாழ விரும்புவதாக கூறியதோடு தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் சீமா கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த ஹிந்து அமைப்பு ஒன்று 72 மணி நேரத்தில் சீமா நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று காலக்கெடு கொடுத்துள்ளது. இது குறித்து கவுரக்-ஷா ஹிந்து தளம் என்ற அமைப்பின் தலைவர் வேத் நாகர் கூறுகையில், “துரோக தேசத்தை சேர்ந்த பெண் இந்தியாவில் தங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது. 72 மணி நேரத்திற்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் பெரும் போராட்டம் நடக்கும்” என கூறியுள்ளார்.