குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமண திருவிழா ஆச்சரியப்பட வைத்துள்ளது. தனியார் தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட இந்த இலவச திருமண விழாவில் 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் 3 லட்சம் ரூபாய் திருமண பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது போக குடும்பத்தை நடத்த தேவையான பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான திருமண விழாவின் காட்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.