நிதியாலோசகர் ஒருவர் ஒரு குழந்தையை வளர்க்க 6.75 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கணக்கிடும்போது, ஒரு குழந்தையைச் சரியான முறையில் வளர்த்து ஆளாக்க இவ்வளவு பெரிய தொகை தேவைப்படுவதாக அவர் அந்த வீடியோவில் விளக்குகிறார்.
மேலும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ள நிலையில், தற்காலப் பொருளாதாரச் சூழலில் திட்டமிடப்படாத தந்தைவழி அல்லது தாய்வழிப் பொறுப்புகள் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை இது உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இருப்பினும், இந்த விவகாரம் இணையத்தில் இருவேறு கருத்துக்களைப் பெற்றுள்ளது. சிலர் இந்த நிதி மதிப்பீடு எதார்த்தமானது என்று ஒப்புக்கொண்டாலும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்குப் பணம் மட்டுமே முக்கியமல்ல, அன்பு மற்றும் அர்ப்பணிப்பே பிரதானம் என்று மறுபுறம் விவாதிக்கின்றனர்.
இந்நிலையில் ஆடம்பரமான கல்வி மற்றும் வாழ்க்கை முறையைத் தவிர்த்தால், குறைந்த செலவிலும் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடியும் எனப் பல பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ தற்போது பெற்றோர்களிடையே நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வையும், அதே சமயம் எதிர்காலத் திட்டமிடல் குறித்த அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
