ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து புனே சேஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் 24 வயது குற்றவாளி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என அறிவித்து மரண தண்டனை வழங்கியது.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நிறுத்து கொல்லப்பட்டார். மறுநாள் சிறுமியின் சடலம் வீட்டு முற்றத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது