மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜக, எதிர்கட்சிகளின் அமளியால் வரும் மார்ச் 20ஆம் தேதிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியபோது இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பியதால் நாடாளுமன்றம் தொடர்ந்து 5-வது நாளாக முடங்கியது.