நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் ஜெனாதன் ஜேக்கப் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறுவதற்கு விந்தணு தானம் செய்து வருகிறார். இவர் மொத்தம் 13 கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்துள்ளார். இவரால் இதுவரை 550 குழந்தைகள் பிறந்துள்ளது. இவர் அதிக அளவில் விந்து தானம் செய்ததால் பின்னாலில் வளரும் குழந்தைகள் தாங்கள் சகோதரர் என்று தெரியாமல் உடலுறவு கொள்ளும் போது பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும்.

ஜெனாதன் 550 பெற்றோருக்கு விந்துணு தானம் செய்த நிலையில் அதை நிறுத்தாமல் தொடர்ந்து தானம் செய்து வந்ததால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெனாதனை கருப்பு பட்டியலில் சேர்த்ததோடு, அவர் விந்தணு தானம் செய்வதற்கும் தடை விதித்துள்ளார்.