நாடாளுமன்ற தேர்தலில் நாமநாதபுரம் தொகுதியில் 6 OPSகள் போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் திராட்சைப்பழ சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பி வரும்பொழுது மண்டபம் பகுதியில் 50 பேர் கொண்ட கும்பல் வந்து தன்னை தாக்க முயன்றதாகவும், பேனர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது சட்டையை பிடித்து ஐயா ஓபிஎஸ் என எதற்காக போஸ்டர்களில் எழுதுகிறாய் என கேட்டு தாக்கினார்கள். இனிமே இவ்வாறு செய்யக்கூடாது என கூறினார்கள் என தெரிவித்துள்ளார். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் ஐயா OPS கட்சியினர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.