மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  விரைவில் தொடங்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35 என ரயில்வே வாரியம் நிர்ணயித்துள்ளது. 50 கி.மீ தூரம் வரை குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.35 ஆக இருக்கும்.

இது இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள டிக்கெட் விலை அட்டவணையில் முன்பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் டிக்கெட் விலையுடன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.