மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 5 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக ஊசியை அகற்றியுள்ளனர். ஹூக்ளியின் ஜாங்கிபாரா பகுதியைச் சேர்ந்த குழந்தை தவறுதலாக ஊசியை விழுங்கியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தைக்கு இஎன்டி துறை மருத்துவர் சுதீப்தாஸ் தலைமையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து குழந்தை தொண்டையில் இருந்து ஊக்கு ஊசியை அகற்றியுள்ளனர்.