
உத்திரபிரதேச மாநிலத்தில் அஸ்கர் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சம்பவ நாளில் தகராறு ஏற்பட்டது.
அதாவது இருவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது திருமணம் குறித்து கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக விவாதித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அஸ்கர் அலி வீடியோ காலில் காதலி இருக்கும் போதே திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பெண் மீது வாலிபரின் குடும்பத்தினர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.