தலைநகர் டெல்லியில் 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து சந்தைகள், கடைகள், பள்ளிகள் மற்றும் மதுபான கடைகள் இந்த நேரத்தில் மூடப்படும். அதனைப் போலவே செப்டம்பர் ஆறு முதல் பத்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து மது கடைகள் மூடப்படும்.

ஜி 20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள இந்தியா அந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டை வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடத்துகின்றது.