மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி மோட்டாரின் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்தது. அதே பகுதியில் சேர்ந்த சக்தி, வசந்த், விக்னேஷ், திருமூர்த்தி இஸ்மாயில் ஆகியோர் உச்சம்பட்டி துணைக்கோள் நகர் பகுதிக்கு வந்து மது குடித்தனர். சிறிது நேரத்தில் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த ஒருவர் பீர் பாட்டிலால் இஸ்மாயிலை தாக்கியுள்ளார்.

இதனால் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனை அறியாத நண்பர்கள் மது போதையில் தூங்கிவிட்டனர். பின்னர் போதை தெளிந்து எழுந்த நண்பர்கள் இஸ்மாயில் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் உடனே அவரது உடலை முட்புதருக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சக்தி, வசந்த் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.