
சென்னை வியாசர்பாடியில் யாசர்(45), அவரது மனைவி பிரியா(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் யாசர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் கதவை திறந்த பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவர்கள் வீட்டில் இருந்த டைரி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினார். அதில் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என்று எழுதப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.