ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு என்னும் தேவையான மார்ச் இரண்டாம் தேதி ஆகிய நான்கு நாட்களிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வித மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.