தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், தன்னுடைய பயணத்தை நிறைவு செய்து சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னைக்கு திரும்பிய முதல்வரை அமைச்சர்கள் கே.என் நேரு, துரைமுருகன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, என்னுடைய வெளிநாட்டு பயணம் வெற்றி கரமாக முடிவடைந்தது. இந்த பயணத்தின் போது 3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று கூறினார். மேலும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் கூறியது குறித்து நிருபர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மேகதாது விவகாரத்தில் யார் என்ன கூறினாலும் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.