ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு RRC புதுடெல்லி வடக்கு ரயில்வேயில் 3,093 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்து முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.rrcnr.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.