நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.