லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இதனால் தாய் ஆனந்த கண்ணீர் விட்டு மகனை கட்டி அணைத்து கொண்டார். இந்த சம்பவம் விமானத்தில் இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.