நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.  இந்நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் நடித்த ‘குமாரி ஸ்ரீமதி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘குமாரி ஸ்ரீமதி’ கதை என் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானது.

30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணை இலக்காகக் கொண்டு இந்த பாத்திரம் உருவாக்கப்பட்டது. நானும் கிட்டத்தட்ட குமாரி ஸ்ரீமதி போலதான். இந்த தொடரில் என் அம்மா கௌதமி என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் என்றும், அதில் என் உண்மையான அம்மாவை பார்த்தேன் என்றும் நித்யா கூறியுள்ளார்.