குழந்தை நல மருத்துவரும், EKAM அறக்கட்டளையின் நிறுவனருமான சாய்லட்சுமி பலிஜேபள்ளி (49) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர், தனது அறக்கட்டளை மூலம் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியுள்ளார். “நாரி சக்தி புரஸ்கார்” உட்பட பல விருதுகளைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவரிடமிருந்தும் விருதைப் பெற்றுள்ளார். இவரது மறைவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.