அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில் உள்ள ரஹோ கிராமத்தில் இருந்து யாம்சன் கடத்தப்பட்டு, பிறகு அவர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. யாம்சன் தனிப்பட்ட வேலைகளுக்காக சென்றிருந்தபோது அவரை கடத்தியுள்ளனர்.