3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது 2வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.