விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டு வருகிறது. தற்போது 7 ஆவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மாற்றியமைக்கவில்லை என்றால் கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கலாசார சீரழிவு ஏற்படுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை மாற்றியமைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.