இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அளவு முடியை வளர்ப்பதற்கு ஆசைப்படுவது போல ஆண்களும் முடியை வளர்த்து சாதனை படைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மூன்று அடி நீளம் உள்ள தன்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஷேவ் செய்யாமல் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். பல்வேறு தாடி போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.