தமிழகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 23 வரை விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தலைவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 607 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய இணையதளத்தை அணுகவும்.