ஐரோப்பாவில் உள்ள மாண்டெனெக்ரோ என்ற நாட்டில் மிக வித்தியாசமான போட்டி ஒன்று நடக்கிறது. அதாவது “மிக மிக சோம்பேறி குடிமகன்” என்ற போட்டி தொடங்கப்பட்டு 26வது நாளை எட்டியுள்ளது. இதில், முதலிடம் பிடிப்பவர்களுக்கு 7,88,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் 24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருக்க வேண்டும்.

8 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் கழிவறை பிரேக் எடுத்துக் கொள்ளலாம். மேலும், போட்டியில் கலந்துகொள்பவர்கள் படுத்தவாறு புத்தகம் படிக்கலாம், செல்போன் பார்க்கலாம். எனினும் உட்காரவோ, எழுந்து நிற்கவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.