அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினரின் வைர மோதிரம் 21 ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடமே கிடைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் நிக் மற்றும் ஷாஹினா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நிக் அவரது மனைவிக்கு அந்த மோதிரத்தை கொடுத்து தன் காதலை தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஷாஹினா அந்த வைர மோதிரத்தை தொலைத்து விட்டதாக தெரிகிறது.

அதன்பின் எவ்வளவு நாட்கள் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின் அவரது வீட்டில் கழிவறையை மாற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் 20 ஆண்டுகளுக்கு முன் தவறவிட்ட மோதிரத்தை கண்டறிந்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர் அந்த மோதிரத்தை வருங்கால தலைமுறைக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.