தமிழக அரசியலில் “அவமானம்” என்பது எப்போதும் ஒரு மாபெரும் எழுச்சிக்கான விதையாகவே இருந்துள்ளது. 2013-ல் இதே சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஒரு சாதாரண நடிகராக ஓரங்கட்டப்பட்ட சி. ஜோசப் விஜய், இன்று அதே மைதானத்தில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று ஒரு வரலாற்றுச் சுழற்சியை நிறைவு செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பங்கேற்ற அந்த பிரம்மாண்ட விழாவிற்கு விஜய் வந்திருந்தார். அப்போது அவரது ‘தலைவா’ திரைப்படம் பல்வேறு அரசியல் நெருக்கடிகளால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது.
In 1972, however, a new party, the All India Dravidian Progressive Federation (All India Dravida Munnetra Kazhagam, AIADMK), split from the DMK. Thereafter, the two parties became bitter rivals and traded terms heading the state government. pic.twitter.com/PCr3BSdXAA
— 𝗔𝗵𝗮𝗺 𝗕𝗿𝗮𝗵𝗺𝗮𝘀𝗺𝗶 (@TheRudra1008) September 4, 2023
அச்சமயம், விஜய்க்கு இழைக்கப்பட்ட அவமானம் திரையுலகையே அதிர வைத்தது. முன்னணி நடிகர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருக்க, விஜய் மட்டும் யாருமே கவனிக்காத கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டார். அந்தத் தனிமையில், நடிகர் விக்ரமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மட்டுமே அவருக்குத் துணையாகச் சென்று பின்வரிசையில் அமர்ந்தனர். அன்று அவர் மௌனமாக இருந்தார், ஆனால் தமிழகம் அந்த மௌனத்தைக் கவனித்துக் கொண்டிருந்தது.
தன் அரசியல் ஆதிக்கத்திற்குப் போட்டியாக எவரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, விஜய்யின் அரசியல் கனவை முளையிலேயே கிள்ள எறிந்த ஒரு “குறியீடு” தான் அந்தப் பின்வரிசை இருக்கை. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதே போன்ற ஒரு அவமானம்தான் ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சிக்கும் காரணமாக இருந்தது. 1989-ல் சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்ட போது, “இனி முதலமைச்சராகத்தான் வருவேன்” என்று சபதமெடுத்து அவர் சாதித்துக் காட்டினார். அன்று அவர் எதை ஆயுதமாகப் பயன்படுத்தினாரோ, அதே அவமானத்தை அவர் விஜய்க்கு பரிசளித்தார். ஆனால், அதுவே இன்று விஜய்யின் வெற்றிக்கு எரிபொருளாக மாறியுள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு அமர வைக்கப்பட்டாரோ, அதே மைதானத்தில் இன்று முதலமைச்சராக விஜய் உரையாற்றத் தொடங்கியபோது மைதானமே அதிர்ந்தது. 2013-ல் ஜெயலலிதா கொடுத்த அந்தப் பின்வரிசை இருக்கைக்கு, 2026-ல் தமிழகத்தின் உயரிய “முதல்வர் நாற்காலி” மூலம் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசியலில், காலதாமதமான பழிவாங்கல் எப்போதும் ஒரு காவியமாகவே முடிகிறது என்பதற்கு இதுவே சாட்சி.
