திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். அந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன், அவரது நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த தங்கநகையை பறிமுதல் செய்தனர்.