தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் அருகே காளி காவு என்ற பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை முகமது பாயிஸ் மீது குழந்தையின் தாய் மற்றும் அவருடைய உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். குழந்தையை அடித்து சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தொண்டையில் உணவு சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் மருத்துவரிடம் கூறியுள்ளார். இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் என்று குழந்தை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாயும் அவருடைய உறவினர்களும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தையை கணவர் கொன்று விட்டதாக தாய் புகார் அளித்துள்ளார்.