துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.