ஜப்பானில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷ் குமார் என்பவர் கடந்த 18 வருடங்களாக வெற்றிகரமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரது வணிக மேலாளர் விசா காலாவதியானதைத் தொடர்ந்து, அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் ஜப்பான் குடிவரவுத் துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், ஜப்பான் நாட்டின் மிகக் கடுமையான மற்றும் கடுமையான குடிவரவுவிதிகளின் காரணமாக, மனிஷ் குமாரின் விசா புதுப்பித்தல் விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த அதிரடி உத்தரவால் நிலைகுலைந்து போன மனிஷ் குமார், “இத்தனை ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வரும் எனது குடும்பத்தினரின் எதிர்காலத்தைக் குறித்து இப்போது பயமாக இருக்கிறது; என் பிள்ளைகள் ஜப்பானிலேயே பிறந்து வளர்ந்தவர்கள், அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டும்தான் தெரியும்.
ஆனால், இப்போது எங்களை திடீரென இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லச் சொல்கிறார்கள், நான் என்ன செய்வது?” என்று கண்ணீர் மல்கக் குமுறியுள்ளார். இத்தனை ஆண்டுகள் ஒரு நாட்டில் உழைத்துவிட்டு, தற்போது விசா விதிகளால் ஒட்டுமொத்தக் குடும்பமும் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோரிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
