உத்தர் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாத் சுக்லா, ரட்சிதா. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ரட்சிதாவின் டியூஷனில் 17 வயது சிறுவன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் பிரபாத்துடன் ஸ்டோர் ரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு பிரபாத் மட்டும்தான் அந்த ரூமில் இருந்து வெளியில் வந்துள்ளார். சிறுவனின் வீட்டிற்கும் அவர் கடத்தப்பட்டதாக கடிதம் ஒன்று சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரட்சிதா மற்றும் பிரபாத் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்களது நண்பன் ஆரியன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் வீட்டிற்கு கடிதம் வருவதற்கு முன்பே சிறுவன் கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.