காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போரில் படுகாயம் அடைந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் காசாவை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.