மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியதாவது, 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு யூனியன் பிரதேசங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசுக்கு சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் உள்ள வாகனங்கள் இனி இயக்க முடியாது.

மேலே கூறப்பட்டுள்ள அலுவலகங்களில் 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் எனவும் அவற்றிற்குரிய பதிவுகளும் புதுப்பிக்கப்படாது என மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.