தர்மபுரியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் காணாமல் போன சிறுமி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் எங்கே சென்றாய்? என பெற்றோர் விசாரித்தனர். அப்போது லோகேஷ்(23) என்பவர் காதலிப்பதாக கூறி சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறியது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் லோகேஷ் ஏரிகரைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.