
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசியில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி சிரமம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.