13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த நபர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை சம்பந்தப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சிறுமியை அறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்த நபரின் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிறுமி தன் தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.