பொதுவாக பலர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பர். அவை மறைந்துவிட்டால் மீள முடியாத அதிர்ச்சிக்கும் செல்வதுண்டு. அந்த மாதிரியான ஒரு சம்பவம்தான் நடிகை குஷ்பு வீட்டில் தற்போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட 12 வருடம் அவர் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருந்த செல்ல நாய் ஸ்னூபி தற்போது உயிரிழந்துள்ளது. இதையடுத்து ஸ்னூபி குறித்து உருக்கமாக பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

நடிகை குஷ்பூ 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் . இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும், அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.