இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 32 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் அழைப்பு விடுத்தன. ஆனால் இரண்டு தரப்பினரும் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் காசா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலில் 9,720 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.